» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை : வாலிபர் போக்சோவில் கைது!
வெள்ளி 28, மார்ச் 2025 8:14:46 PM (IST)
நாங்குநேரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம், நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் (23). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிளஸ் -1 மாணவியிடம் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து மாணவியிடம் சமூக வலைதளங்களில் பேசிவந்த சுந்தர், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த காதல் விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்ததையடுத்து அவர் கண்டித்துள்ளார். உடனே மாணவி வாலிபரிடம் பேசுவதை நிறுத்தினார். ஆனாலும் சுந்தர் மாணவியை தன்னிடம் பேசுமாறு தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளார். அடிக்கடி அந்த மாணவியை வழிமறித்து தன்னிடம் பேசுமாறு அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)
