» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

திருநெல்வேலியில் விதிமுறைகளை பின்பற்றாமல் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் அவர்களின் உத்தரவுப்படி இன்று காலை திருநெல்வேலியிலிருந்து அம்பை செல்லும் மெயின் ரோட்டில், முன்னீர் பள்ளம் காவல் நிலையம் முன்பாக காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 அப்போது, பள்ளிக்கு குழந்தைகளை எடுத்து செல்லும் மூன்று சக்கர வாகனங்களை சோதனை செய்து, ஓட்டுநர் இருக்கை அருகே மாணவர்களை அமர வைத்தும் மற்றும் வாகனத்தின் பின்னால் கால்களை தொங்க விட்டபடி அழைத்துச் செல்லும் வாகனத்தையும், வேகமாகவும், முறையான சீருடை அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தியும், எச்சரிக்கை செய்தும், விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)

நெல்லை அருகே வாலிபர் கழுத்தை இறுக்கி படுகொலை : அக்காள் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:22:08 AM (IST)

நெல்லையப்பர் கோவிலுக்கு குட்டி யானை வாங்குவதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
வியாழன் 30, அக்டோபர் 2025 8:24:50 AM (IST)

தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் நவ.1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:37:25 AM (IST)




