» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

திருநெல்வேலியில் விதிமுறைகளை பின்பற்றாமல் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் அவர்களின் உத்தரவுப்படி இன்று காலை திருநெல்வேலியிலிருந்து அம்பை செல்லும் மெயின் ரோட்டில், முன்னீர் பள்ளம் காவல் நிலையம் முன்பாக காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பள்ளிக்கு குழந்தைகளை எடுத்து செல்லும் மூன்று சக்கர வாகனங்களை சோதனை செய்து, ஓட்டுநர் இருக்கை அருகே மாணவர்களை அமர வைத்தும் மற்றும் வாகனத்தின் பின்னால் கால்களை தொங்க விட்டபடி அழைத்துச் செல்லும் வாகனத்தையும், வேகமாகவும், முறையான சீருடை அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தியும், எச்சரிக்கை செய்தும், விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)
