» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)
வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து நெல்லை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெல்லை ரெட்டியார்பட்டி ஸ்பென்சர் காலனியை சேர்ந்தவர் குத்தால விசேஷ். இவருக்கு சொந்தமாக பாளையங்கோட்டை தாலுகா டக்கரம்மாள்புரம் அருகே 10 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கோரி பெருமாள்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தனது தந்தை மூலம் விண்ணப்பிக்க வந்தார்.
அப்போது அங்கு பணியில் இருந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் மற்றும் வணிக உதவியாளர் உதயகுமார் ஆகியோர் தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.7,500 லஞ்சமாக கேட்டுள்ளனர். இதுகுறித்து குத்தால விசேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தொடர்ந்து அவர்களின் அறிவுரையின்பேரில் குத்தால விசேஷ் கடந்த 30.9.2009 அன்று மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று ரசாயனம் தடவிய பணம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக 2 மின்வாரிய அதிகாரிகளையும் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு நெல்லையில் ஊழல் வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி சுப்பையா தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சிவக்குமார், உதயகுமார் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)


