» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கார் தீப்பிடித்து எரிந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக அச்சம்!

செவ்வாய் 17, மார்ச் 2026 10:15:08 AM (IST)

திசையன்விளை அருகே கார் தீப்பிடித்து எரிந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம், திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தங்கரை பள்ளிவாசல் சாலையில், கார் ஒன்று முழுமையாக எரிந்த நிலையில் இருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்குள்ளான காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணம் செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தின் காரணமாகவே கார் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்பட்டாலும், உயிரிழப்புகள் மற்றும் விபத்தின் பின்னணி குறித்துத் துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சம்பவ இடத்திற்குத் தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கார் எரிந்ததற்கான அறிவியல் ரீதியான காரணங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்து நடந்த இடத்தில் காவல்துறை உயரதிகாரிகள் முகாமிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory