» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ரயில் முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை : நெல்லையில் பரிதாபம்
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 8:58:23 PM (IST)
நெல்லையில் ரயில்முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் சிவசங்கர் (40). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, சிவசங்கர் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மதியம் அவர் தனது வீட்டின் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார்.
அப்போது அந்த வழியாக வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிவசங்கர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மன அழுத்த பிரச்சினையால் சிவசங்கர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 5:52:35 PM (IST)

வெங்காடம்பட்டியில் இரு பெரும் விழா: 190 வது திருவள்ளுவர் சிலை திறப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 3:21:48 PM (IST)

ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)


