» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

திருநெல்வேலியில் சேதம் அடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 43வது வார்டில் பிபிசி காலனி, TSMO நகர், குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. பாதாள சாக்கடை பணியின் இங்கு உள்ள சாலைகளை அனைத்தும் முழுவதுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி மிக மோசமாக நிலையில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடியும் சேதமடைந்து உள்ளது. வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் பழிவாங்க காத்திருக்கும் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனர்/தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)


