» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

திருநெல்வேலியில் சேதம் அடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 43வது வார்டில் பிபிசி காலனி, TSMO நகர், குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. பாதாள சாக்கடை பணியின் இங்கு உள்ள சாலைகளை அனைத்தும் முழுவதுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி மிக மோசமாக நிலையில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடியும் சேதமடைந்து உள்ளது. வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் பழிவாங்க காத்திருக்கும் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனர்/தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி
புதன் 21, ஜனவரி 2026 8:28:01 PM (IST)

திருநெல்வேலியில் 1.3 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது: பைக் பறிமுதல்!
புதன் 21, ஜனவரி 2026 5:02:15 PM (IST)

நெல்லையில் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
புதன் 21, ஜனவரி 2026 3:32:52 PM (IST)

நெல்லை அருகே கூட்டம், கூட்டமாக வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:03:08 PM (IST)

நெல்லை அருகே அக்காவை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:09:16 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீபத்திருவிழா கோலாகலம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திங்கள் 19, ஜனவரி 2026 8:26:27 AM (IST)

