» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

திருநெல்வேலியில் சேதம் அடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 43வது வார்டில் பிபிசி காலனி, TSMO நகர், குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. பாதாள சாக்கடை பணியின் இங்கு உள்ள சாலைகளை அனைத்தும் முழுவதுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி மிக மோசமாக நிலையில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடியும் சேதமடைந்து உள்ளது. வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் பழிவாங்க காத்திருக்கும் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனர்/தலைவர் மு.சுகன் கிறிஸ்டோபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

