» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேலப்பாளையத்தில் நாகர்கோவில்-கோவை ரயில் நிறுத்தம் : பயணிகள் வரவேற்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 10:55:28 AM (IST)
மேலப்பாளையத்தில் நாகர்கோவில்-கோவை ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் விரைவு ரயில் மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ராபர்ட் புரூஸ் எம்.பி. மேலப்பாளையத்தில் ரயில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன்பலனாக நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ரயில் நேற்று காலை 9 மணிக்கு மேலப்பாளையம் ரயில் நிலையத்துக்கு வந்து நின்றது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். ரயில் ஓட்டுனர்களுக்கு மேலப்பாளையம் ரயில் பயணிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் முத்துவேல், முகம்மது கக்கூர், காதர் மைதீன், நசுருல்லா வக்கீல் மதார் மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:30:32 AM (IST)

கல்லூரி பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருட்டு : வேலைக்கார பெண் உள்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:28:01 AM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)

கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:07:40 PM (IST)




