» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேலப்பாளையத்தில் நாகர்கோவில்-கோவை ரயில் நிறுத்தம் : பயணிகள் வரவேற்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 10:55:28 AM (IST)
மேலப்பாளையத்தில் நாகர்கோவில்-கோவை ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் விரைவு ரயில் மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ராபர்ட் புரூஸ் எம்.பி. மேலப்பாளையத்தில் ரயில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன்பலனாக நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ரயில் நேற்று காலை 9 மணிக்கு மேலப்பாளையம் ரயில் நிலையத்துக்கு வந்து நின்றது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். ரயில் ஓட்டுனர்களுக்கு மேலப்பாளையம் ரயில் பயணிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் முத்துவேல், முகம்மது கக்கூர், காதர் மைதீன், நசுருல்லா வக்கீல் மதார் மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 5:52:35 PM (IST)

வெங்காடம்பட்டியில் இரு பெரும் விழா: 190 வது திருவள்ளுவர் சிலை திறப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 3:21:48 PM (IST)

ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)


