» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் அருட் சகோதரிகளால் நடத்தப்படும் புனித சேவியர் பள்ளியில் குட்டி குழந்தைகளின் அட்டகாசமான விதைப்பந்து தயாரிப்பு பார்ப்போரையும், கேட்போரையும் பிரமிக்க வைத்தது.
250 குழந்தைகள், 2 மணி நேர ஆத்மார்த்த உழைப்பால் 25,360 விதைப்பந்துகளை செய்து முடித்து ஆச்சரியப்பட வைத்தனர். பள்ளி தாளாளர் அருட் சகோதரி ஜெய மேரி தலைமை தாங்கி விதைகள் மீது புனித நீர் தெளித்து அத்தனையும் மரமாகி, சோலையாக பிரார்த்தனை செய்தார். பள்ளி முதல்வர் அருட் சகோதரி புனிதா முன்னிலை வகித்தார். ஆசிரியை ரேவதி வரவேற்றார். வரம் அமைப்பு இன்ஜினியர் நாகராஜன், பேட்டரி விநாயகம், பசுமை ஜவஹர் விதைப்பந்துகள் தயாரிப்பிற்கு பக்க பலமாக இருந்தனர். சமூகநல ஆர்வலர் வெங்காடம் பட்டி பூ. திருமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாமிரபரணி நதியின் தாகம் தீர்க்க விதைப்பந்துகள் உதவும் என பேசினார்.
ஆசிரியைகள் செலின், பீமு, ரதி, விஜி, பேபி, சுபா, சிவராணி, தங்கம், ஆரோக்கிய ஜாஸ்மின், வசந்தகுமாரி குழந்தைகள் விதைப்பந்து தயாரிப்பை ஒருங்கிணைத்தனர். தன் னார்வலர்களாக மாணவ மாணவியர் சஷினி, பூர்விகா, சிவஹரிணி, ஜாக்சன், பிளஸ்ஸி, சபரீஷ் உலகநாதன், மீர்ஜா, முத்து ஜகதீஷ், அக்ஷிதா, ஜெசிகா ஜேன், முத்துலட்சுமி மண், தண்ணீர், விதவிதமான மர விதைகளை ஒருங்கிணைத்தனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவர் இசக்கிமுத்து 1600 விதைப்பந்துகளும், மாணவர் சக்திவேல் 1500 விதைப்பந்துகளும் செய்து சாதித்தனர். எல்.கே.ஜி, யு.கே.ஜி, ப்ரீ. கே.ஜி குழந்தைகளும் விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபட்டது. குறிப்பிடத்தக்கது அனைவருக்கும் ஹரி பிரியாணி அதிபர் ஹரி சான்றிதழ் வழங்கினார். 50 லட்சம் விதைப்பந்துகளை விரைவில் எட்டப் போகிறோம் என திருமாறன் அறிவித்தார். ஜவஹர், நாகராஜன், விநாயகம், பள்ளி முதல்வர் புனிதாவுக்கு "எட்டாவது அதிசயம்” விருதுகளை திருமாறன் வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)

தந்தை கொலையில் குற்றவாளிகள் பிடிபடாததால் விரக்தி: மகள் தற்கொலை!
திங்கள் 23, மார்ச் 2026 12:34:43 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திங்கள் 23, மார்ச் 2026 12:31:04 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 26-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 23, மார்ச் 2026 10:36:36 AM (IST)

அரசு குடியிருப்பில் திமுக தேர்தல் அலுவலகம்? தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவால் சீல் வைப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 10:21:46 AM (IST)

