» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்: தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

வியாழன் 6, நவம்பர் 2025 4:06:52 PM (IST)



சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் தோற்றால் நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் சங்கரன்கோவில், திருநெல்வேலி சட்டசபை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தி.மு.க. தெற்கு மண்டல பொறுப்பாளர் எம்.பி. கனிமொழியும் பங்கேற்றார்.

இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். நெல்லை தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் பதவிகள் பறிக்கப்படும் என்று நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.நெல்லை சட்டசபை தொகுதி உறுப்பினராக தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory