» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆர்வலர் தகவல்!
வியாழன் 4, டிசம்பர் 2025 3:31:53 PM (IST)
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி வெதர்மேன் ராஜா சமூக வலைளத்தில் வெளியிட்ட பதிவில்: ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக இன்று தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு மிக சாதகமாக உள்ளது. இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலை நேரங்களில் கனமழை பெய்யும்.
குறிப்பாக இராமநாதபுரம், இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பாம்பன் தனுஷ்கோடி மண்டபம் வைப்பார், தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய கடலோர பகுதிகளில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நெல்லை தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று மாலை இரவு நேரங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். அம்பாசமுத்திரம் விகேபுதூர் ஆலங்குளம் தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் ஆகிய தாலுகாவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீபத்திருவிழா கோலாகலம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திங்கள் 19, ஜனவரி 2026 8:26:27 AM (IST)

நெல்லை அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை : உறவினர் கைது!
சனி 17, ஜனவரி 2026 8:40:25 AM (IST)

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
புதன் 14, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

