» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி
புதன் 21, ஜனவரி 2026 8:28:01 PM (IST)

சேரன்மகாதேவியில் பொங்கலை முன்னிட்டு போலீஸ் பொதுமக்களுக்கான நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் ஆகியோரின் ஆலோசனையின்பேரில், சேரன்மகாதேவி காவல் நிலையம் சார்பில் பாரதிதாசன் தெருவில் நடைபெற்ற இப்போட்டியில் போலீஸôர், பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உறியடித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியை காவல் ஆய்வாளர் தொடக்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் தர்மராஜ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இதில், காவல் உதவி ஆய்வாளர்கள் சுடலைகண்ணு, அன்னஜோதி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஹரிஹரசுப்பிரமணியன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் 1.3 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது: பைக் பறிமுதல்!
புதன் 21, ஜனவரி 2026 5:02:15 PM (IST)

நெல்லையில் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
புதன் 21, ஜனவரி 2026 3:32:52 PM (IST)

நெல்லை அருகே கூட்டம், கூட்டமாக வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:03:08 PM (IST)

நெல்லை அருகே அக்காவை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:09:16 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீபத்திருவிழா கோலாகலம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திங்கள் 19, ஜனவரி 2026 8:26:27 AM (IST)

நெல்லை அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை : உறவினர் கைது!
சனி 17, ஜனவரி 2026 8:40:25 AM (IST)

