» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி
புதன் 21, ஜனவரி 2026 8:28:01 PM (IST)

சேரன்மகாதேவியில் பொங்கலை முன்னிட்டு போலீஸ் பொதுமக்களுக்கான நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் ஆகியோரின் ஆலோசனையின்பேரில், சேரன்மகாதேவி காவல் நிலையம் சார்பில் பாரதிதாசன் தெருவில் நடைபெற்ற இப்போட்டியில் போலீஸôர், பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உறியடித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியை காவல் ஆய்வாளர் தொடக்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் தர்மராஜ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இதில், காவல் உதவி ஆய்வாளர்கள் சுடலைகண்ணு, அன்னஜோதி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஹரிஹரசுப்பிரமணியன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட 12 மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:38:00 PM (IST)

வீடுபுகுந்து பேராசிரியையை அரிவாளால் தாக்கி 14 பவுன் நகை கொள்ளை: நெல்லையில் துணிகரம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:13:10 AM (IST)

பிரச்சாரம் ஓய்ந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:34:50 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

