» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி
புதன் 21, ஜனவரி 2026 8:28:01 PM (IST)

சேரன்மகாதேவியில் பொங்கலை முன்னிட்டு போலீஸ் பொதுமக்களுக்கான நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் ஆகியோரின் ஆலோசனையின்பேரில், சேரன்மகாதேவி காவல் நிலையம் சார்பில் பாரதிதாசன் தெருவில் நடைபெற்ற இப்போட்டியில் போலீஸôர், பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உறியடித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியை காவல் ஆய்வாளர் தொடக்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் தர்மராஜ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இதில், காவல் உதவி ஆய்வாளர்கள் சுடலைகண்ணு, அன்னஜோதி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஹரிஹரசுப்பிரமணியன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)

மும்பை தாதர் - சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு : பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, ஜூன் 2026 10:11:04 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் ஆய்வு!
புதன் 10, ஜூன் 2026 4:58:52 PM (IST)


