» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)
மகாசிவராத்திரியை முன்னிட்டு பஞ்சபூத தலங்கள் திருக்கோவில்களுக்கு சிறப்பு சேவைபேருந்துகள் இயக்கம் திருநெல்வேலி மண்டல பொது மேலாளர் சிவகுமார் தகவல்
15.02.2026 அவன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு பஞ்சபூத தலங்கள் திருக்கோவில்களுக்கு சென்று வர பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பஞ்சபூத தலங்களுக்கு, 15.02.2026 அன்று மாலை 06.00 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் மாலை 07.00 மணிக்கு சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் புறப்பட்டு 1) தாருகாபுரம் 2) சங்கரன்கோயில் 3) கரிவலம்வந்தநல்லூர் 4) தென்மலை 5) தேவதானம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், மற்றும் சங்கரன்கோவில் பேருந்து நிலையங்களில் இருந்து இச்சிறப்பு சேவை பேருந்துகளுக்கு. இன்று முதல் 14.02.2026 வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
(திருநெல்வேலி தொடர்புக்கு 8144625265)
(சங்கரன்கோவில் தொடர்புக்கு : 96008 27070)
இணையதளம் முன்பறிவு : www.tnstc.in மூலம் முன்பதிவு செய்யலாம்
இதற்கான பயணக்கட்டணத் தொகை
திருநெல்வேலியில் இருந்து நபர் ஒன்றுக்கு ரூ.300/- ஆகும்.
சங்கரன்கோவிலில் இருந்து நபர் ஒன்றுக்கு ரூ.200/- ஆகும்
மேலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 15.02.26 அன்று நவகைலாய திருத்தலங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் மாலை 6.00 மணிக்கு இயக்கப்படும்.இதற்கான பயணக்கட்டணத் தொகை, நபர் ஒன்றுக்கு ரூ.600/- ஆகும். எனவே, இந்த சிறப்பு பஞ்சபூத தலங்கள், நவகைலாய திருத்தலங்களுக்கு இயக்கப்படும் பேருந்து சேவைகளை பயன்படுத்தி பயன்பெறுமாறு பொதுமக்கள் கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)

