» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி இசைத் விழா: 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 9, மார்ச் 2026 9:37:29 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கலையரங்கத்தில் மாசி இசைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு நகரங்களிலிருந்து வந்திருந்த இசைப் பள்ளி மாணவர்கள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த இசைத் திருவிழாவில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் கர்நாடக சங்கீதம், வாய்ப்பாட்டு, மிருதங்கம் வாசித்தல் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.
காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், சென்னை மறைமலைநகர் சுருதிலயா இசைப் பள்ளியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இசைப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மாணவர் மோனிஷ் விஜய் பாடிய தனிப் பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து மற்ற மாணவர்கள் பல்வேறு பக்திப் பாடல்களைப் பாடி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த இசைத் திருவிழாவைக் கோவிலுக்குத் தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டு ரசித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

