» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் விருது வழங்கிக் கௌரவித்தார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழலை மேம்படுத்தப் பாடுபட்டவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். அதிக மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தமைக்காகவும், தாமிரபரணி ஆற்றில் சேரும் துணிகளைத் தன்னார்வலராக அகற்றிச் சேவையாற்றியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.
கங்கைகொண்டான் சிப்காட் ஏடிசி டயர்ஸ் (ATC Tires): நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தமைக்காகப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாளையங்கோட்டை புனித இக்னேசியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி: பள்ளியில் நெகிழி (Plastic) பயன்பாட்டைத் தவிர்த்து, மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக விருது வழங்கப்பட்டது.
சிறந்த மருத்துவர்களுக்குக் கௌரவம்:
குடும்ப நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் கருத்தடை, மயக்கவியல் மற்றும் குடும்ப நல ஆலோசனை ஆகிய பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படும் மருத்துவ அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024-2025-ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றிய மார்டின், சாந்தி சுசீந்திரன், ஹேனா விர்ஜினியா சாந்தி, முத்துலெட்சுமி, ரேவதி, மகேஷ்வரி ஆகிய மருத்துவர்களுக்குக் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியச் செயற்பொறியாளர் கிருஷ்ணபாபு, உதவிச் செயற்பொறியாளர் . ஜெயபிரியா, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மரு. லதா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சோ. ஜெயசித்ரா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)


