» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 5:03:53 PM (IST)
பங்குனி உத்திரத் திருவிழாவைக் கொண்டாடும் வகையில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி (புதன்கிழமை) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.இருப்பினும், அவசர காலப் பணிகளைக் கவனிக்கும் வகையில் முக்கிய அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் இயங்கும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொதுத்தேர்வுகள் மற்றும் பிற அரசுத் தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. அவர்கள் தங்களது பணிகளைத் தொடர வேண்டும்.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஏப்ரல் 11-ம் தேதி (சனிக்கிழமை) அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு அண்டை மாவட்டமான நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு: போட்டித் தேர்வு பயிற்சி மையத்திற்குச் சென்றபோது சோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:46:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திங்கள் 29, ஜூன் 2026 8:25:45 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)
_1782541937.jpg)
தமிழகத்தின் 6 தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண்கிறது நாதக: அம்பையில் சீமான் போட்டி!
சனி 27, ஜூன் 2026 12:02:22 PM (IST)

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)


