» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது!

ஞாயிறு 29, மார்ச் 2026 8:58:52 AM (IST)

குலசேகரன்பட்டினம் அருகே காதல் திருமணம் செய்து கணவர் வீட்டில் வசித்து வந்த இளம்பெண்ணைக் காரில் கடத்திச் சென்ற அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகே ஆதியாக்குறிச்சியைச் சேர்ந்த செல்வா (27) என்பவரும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து கடந்த 15-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து ஏற்கனவே நடந்த போலீஸ் விசாரணையில், அந்தப் பெண் தனது விருப்பப்படியே கணவருடன் செல்வதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் உறவினர் ஒருவர், பெண்ணிடம் நைசாகப் பேசி அவரை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நெல்லையில் இருந்த அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டனர்.

கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர்கள் மற்றும் உறவினர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பெண் அவரது கணவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து

காதல்Mar 29, 2026 - 06:41:30 PM | Posted IP 104.2*****

இல்லை. இது காமம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory