» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திமுக கூட்டணியில் சீட் இல்லையேல் தனித்துப் போட்டி: சமத்துவ மக்கள் கழக செயற்குழுவில் தீர்மானம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:30:39 PM (IST)

திமுக கூட்டணியில் சீட் வழங்காவிட்டால் தனித்துப் போட்டியிடப்போவதாக சமத்துவ மக்கள் கழக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு கூட்டம், மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்டப் பொருளாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் காமராசு நாடார், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், நாடார் பேரவை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் ஒரு நல்ல நண்பனாகத் தொடர்ந்து வரும் சமத்துவ மக்கள் கழகத்திற்கு, இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தமிழக முதல்வரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் வாழும் ஒரு கோடிக்கும் அதிகமான நாடார் சமுதாய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 40 ஆண்டுகாலப் பொதுவாழ்வு அனுபவம் கொண்ட சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் அவர்களுக்கு திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பளித்து, நாடார் சமுதாயத்தை அங்கீகரிக்க வேண்டும்.
கட்சித் தலைவர் ஆணையிட்டால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கழக வேட்பாளர்கள் தனித்துப் போட்டியிடத் தயாராக உள்ளனர். கட்சியின் நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் அடையாளம் காட்டும் வேட்பாளர்களின் வெற்றிக்கு மட்டுமே தேர்தல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என இக்கூட்டம் ஒருமனதாக வலியுறுத்துகிறது.
இந்தத் தீர்மானங்கள் தூத்துக்குடி மாவட்ட அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் காமராசு நாடார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)


கோமாளிMar 30, 2026 - 05:53:15 PM | Posted IP 104.2*****