» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:23:45 AM (IST)
நெல்லையில் செல்போன் பயன்படுத்துவதைக் கண்டித்ததால், மனமுடைந்த 8-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் சேரன்மகாதேவி சாலை, முகமது அலி தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் பேட்டையில் உள்ள ஒரு முடித்திருத்தும் கடையில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மகாராணி. இவர்களது மகள் முத்துமாரி (13), டவுனில் உள்ள ஒரு மாநகராட்சிப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளித் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், முத்துமாரி பாடங்களைப் படிக்காமல் செல்போனில் நேரத்தைச் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அவரது பெற்றோர், தேர்வுக் காலத்தில் செல்போன் பார்க்கக் கூடாது என மென்மையாகக் கண்டித்துள்ளனர்.
இதனால் கடும் விரக்தியடைந்த முத்துமாரி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பெற்றோர், மகள் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், முத்துமாரியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறிய காரணத்திற்காக ஒரு இளம் உயிர் பறிபோனது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)


