» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மருமகளைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்டவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் சிறை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:46:20 AM (IST)
அம்பாசமுத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (56), விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கணேசன் (45) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி, ராஜகோபாலின் மருமகளைக் கணேசன் அவதூறாகப் பேசியுள்ளார். இதனை ராஜகோபால் தட்டிக்கேட்டபோது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன், அரிவாளால் ராஜகோபாலைச் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற ராஜகோபாலின் மகன் கண்ணனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்தக் கொலை குறித்து அம்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கதிரவன் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், இதர குற்றங்களுக்காக 13 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் காளிமுத்து ஆஜரானார்.
இந்த வழக்கில் திறம்படப் புலனாய்வு செய்து, சாட்சிகளைச் சரியாக ஆஜர்படுத்திக் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த அம்பை டிஎஸ்பி கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சண்முகவேல், முன்னாள் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் ஏட்டு செல்வி ஆகியோரை மாவட்ட எஸ்பி பிரசன்னகுமார் பாராட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவேங்கடம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான சதுர வடிவ செங்கல் படிக்கிணறு கண்டுபிடிப்பு!
செவ்வாய் 7, ஜூலை 2026 3:55:45 PM (IST)

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் பெண் உட்பட 11 பேர் கைது: 2பேருக்கு கை முறிவு!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:20:29 AM (IST)

9 உயிர்களைப் பலிவாங்கிய தண்ணீர்ப் பிரச்சினை: நெல்லை கொடூரக் கொலைகளின் பின்னணி!
சனி 4, ஜூலை 2026 9:10:52 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது : சிங்கப்பெண் அதிரடிப்படையால் சிக்கியனார்!
வெள்ளி 3, ஜூலை 2026 8:39:43 AM (IST)

மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு!
வெள்ளி 3, ஜூலை 2026 8:35:22 AM (IST)


