» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆலங்குளம் சூடு: சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா சஸ்பெண்ட் – 3 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:26:39 AM (IST)
ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் உட்பட 3 போலீசார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரைச் சேர்ந்த விவசாயி மற்றும் பனைத் தொழிலாளியான மணிகண்டன் (35) என்பவரது தோட்டத்தில், கள் விற்பனை புகாரைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஆத்திரமடைந்த இசக்கிராஜா, தனது கைத்துப்பாக்கியால் மணிகண்டனைச் சுட்டார். இதில் மணிகண்டனின் கால்களில் இரண்டு குண்டுகள் பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜாவைப் பணி இடைநீக்கம் (Suspension) செய்து நெல்லை சரக டிஐஜி சரவணன் நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
பாதிக்கப்பட்ட மணிகண்டன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆலங்குளம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா உட்பட மூன்று போலீசார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவர்கள் மீது ஆபாசமாகப் பேசுதல் கொலை முயற்சி பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் கடுமையாகக் காயம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், முன்னெச்சரிக்கையாகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : கள்ளக்காதலனுடன் தாய் கைது!
ஞாயிறு 24, மே 2026 8:46:25 PM (IST)

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சனி 23, மே 2026 8:56:35 AM (IST)

தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம்: கால்நடைகளின் விபரங்களைப் புதுப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 22, மே 2026 5:47:46 PM (IST)

கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையம் : ஆட்சியர் இரா.சுகுமார் திறந்து வைத்தார்
வியாழன் 21, மே 2026 4:38:35 PM (IST)

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்..? மண்டல மேலாளர் மறுப்பு; 2 பேர் பணிநீக்கம்!
வியாழன் 21, மே 2026 11:20:26 AM (IST)

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)


