» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு சட்டக் கல்லூரியில் பிரம்மாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 1400 மாணவர்கள் பங்கேற்பு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 1:01:30 PM (IST)

பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.
"தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா" என்ற முழக்கத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (09.04.2026) மாபெரும் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார் இதனைத் தொடங்கி வைத்தார்.
2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் அரசு சட்டக்கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், தேர்தல் விழிப்புணர்வு மன்றம் மற்றும் உடற்கல்வித்துறை என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து பங்கேற்றனர்.
வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவ-மாணவியர்கள் தேர்தல் ஆணையத்தின் 'cVIGIL' செயலி வடிவில் மைதானத்தில் நின்று காட்சிப்படுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சுமார் 1,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் இராமபிரான் ரஞ்சித்சிங், பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், நாராயணி, புவனேஸ்வரி, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். முதல் வாக்காளர்கள், மீனவர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும் 100% வாக்குப்பதிவை கொண்டு சேர்ப்பதே இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் நோக்கம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவேங்கடம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான சதுர வடிவ செங்கல் படிக்கிணறு கண்டுபிடிப்பு!
செவ்வாய் 7, ஜூலை 2026 3:55:45 PM (IST)

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் பெண் உட்பட 11 பேர் கைது: 2பேருக்கு கை முறிவு!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:20:29 AM (IST)

9 உயிர்களைப் பலிவாங்கிய தண்ணீர்ப் பிரச்சினை: நெல்லை கொடூரக் கொலைகளின் பின்னணி!
சனி 4, ஜூலை 2026 9:10:52 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது : சிங்கப்பெண் அதிரடிப்படையால் சிக்கியனார்!
வெள்ளி 3, ஜூலை 2026 8:39:43 AM (IST)

மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு!
வெள்ளி 3, ஜூலை 2026 8:35:22 AM (IST)


