» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி-சென்னை விமான கட்டணம் ரூ.17 ஆயிரம் ஆக உயர்வு!

திங்கள் 27, ஏப்ரல் 2026 7:47:26 PM (IST)

தூத்துக்குடி-சென்னை விமான கட்டணம் ரூ.17 ஆயிரமாக அதிகரிப்பால் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. இதில் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இன்று திரும்பினர். பெரும்பாலானோர் பஸ், கார்கள் மற்றும் ரெயில்களில் வந்தாலும் சிலர் விமானங்களில் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தனர். இதனால் நேற்று இரவில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஓரிரு விமானங்களில் மட்டுமே, ஒரு சில டிக்கெட்டுகள் உள்ளன. அந்த டிக்கெட் கட்டணங்கள் பயணிகளை அதிர்ச்சி அடையும் விதத்தில், 3 மடங்கு வரை அதிகரித்துள்ளன. தூத்துக்குடி-சென்னை வழக்கமான கட்டணம் ரூ.5,354 நேற்று இரவு முதல் இன்று காலை வரை விமான கட்டணங்கள் ரூ.17,089 வரை உயர்ந்து இருந்தது. இதேபோல் மதுரை-சென்னை ரூ.8ஆயிரம் வரையும், திருச்சி-சென்னைக்கு ரூ.9 ஆயிரம் வரையும் உயர்ந்து இருந்தன. விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பால் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.


மக்கள் கருத்து

அதுApr 28, 2026 - 06:31:30 AM | Posted IP 104.2*****

நம்ம ஊரு திருட்டு திராவிட அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு இல்லையே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory