» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோடை விடுமுறை எதிரொலி: நெல்லை, கோவை வந்தே பாரத் ரயில்களில் ஜூன் வரை இடமில்லை!
சனி 2, மே 2026 3:41:41 PM (IST)
கோடை விடுமுறை எதிரொலியாக சுற்றுலா மற்றும் சொந்த ஊர் செல்வோரின் வருகையால் நெல்லை, நாகர்கோவில் வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் ஜூன் வரை நிரம்பியுள்ளன.
பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக, சொகுசுப் பயணத்தை விரும்பும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'வந்தே பாரத்' ரயில்களில் ஜூன் முதல் வாரம் வரை இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி மற்றும் ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்களுக்கு மக்கள் தங்கள் குடும்பங்களுடன் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் முதல் சாதாரண ரயில்கள் வரை அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
வந்தே பாரத் ரயில்களில் நிலவரம்:
முழுமையான ஏ.சி. வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், பயண நேரக் குறைவு மற்றும் சொகுசு வசதி காரணமாக மக்கள் இதில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கோவை வந்தே பாரத்: மே 29-ம் தேதி வரை காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது. சதாப்தி எக்ஸ்பிரஸிலும் மே 8 வரை இடமில்லை.
நெல்லை வந்தே பாரத்: மே 16-ம் தேதி வரை அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
நாகர்கோவில் வந்தே பாரத்: மே 17-ம் தேதி வரை ஒரு இடம் கூட இல்லை.
பெங்களூரு வழித்தடம்: சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயிலில் மே 11 வரை காத்திருப்போர் பட்டியல் உள்ளது. இதேபோல் சதாப்தி, லால்பாக், பிருந்தாவன் மற்றும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இடமில்லை.
அதிகாரிகள் விளக்கம்: இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், "மே மாதம் இறுதி வரையில் இதே நிலைதான் நீடிக்கும். ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கும் வரை ரயில்களில் இடம் கிடைப்பது கடினம். காத்திருப்போர் பட்டியலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது," எனத் தெரிவித்தனர். ரயில்களில் இடம் கிடைக்காத காரணத்தால், பயணிகள் அதிகக் கட்டணம் கொடுத்து ஆம்னி பேருந்துகளை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

நெல்லை வி.கே. புரத்தில் ரூ.29.51 கோடியில் குடிநீர் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:42:56 PM (IST)

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)



Babuமே 2, 2026 - 06:33:45 PM | Posted IP 172.7*****