» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாக்கு எண்ணும் பணி: வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
சனி 2, மே 2026 5:03:13 PM (IST)

தூத்துக்குடியில் மே 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணி தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் விஷூ மகாஜன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 2) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷூ மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அலுவலர்களுக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றுவது குறித்து ஆட்சியர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இக்கூட்டத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் முக்கிய வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் தோல்வியால் விபரீத முடிவு : அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை!
செவ்வாய் 5, மே 2026 12:51:25 PM (IST)

தென்காசியில் 4 தொகுதிகளைக் கைப்பற்றிய திமுக கூட்டணி: சங்கரன்கோவில் அதிமுக வசமானது!
செவ்வாய் 5, மே 2026 8:52:28 AM (IST)

நெல்லையில் 3 தொகுதிகளைக் கைப்பற்றி தவெக அசத்தல்: பாளையைத் தக்கவைத்த திமுக!
செவ்வாய் 5, மே 2026 8:39:37 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தவெக ஆதிக்கம்: அம்பையில் அதிமுக முன்னிலை!
திங்கள் 4, மே 2026 12:41:03 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை: அப்பாவு பின்னடைவு!
திங்கள் 4, மே 2026 11:04:50 AM (IST)

கோடை விடுமுறை எதிரொலி: நெல்லை, கோவை வந்தே பாரத் ரயில்களில் ஜூன் வரை இடமில்லை!
சனி 2, மே 2026 3:41:41 PM (IST)



ராஜ்மே 2, 2026 - 07:22:53 PM | Posted IP 162.1*****