» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெற்றி - தோல்வியை சமமாகக் கருதி லட்சியப் பயணத்தை தொடருவோம்: கீதாஜீவன் அறிக்கை!

செவ்வாய் 5, மே 2026 3:27:53 PM (IST)

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் வெற்றி தேடித்தந்த வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி. கீதாஜீவன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும் மற்றும் திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், உதயசூரியனுக்கு வாக்களித்த 62,805 வாக்காளப் பெருமக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கழகத் தலைவர் வழியில், அரசியல் பொதுவாழ்வில் கொள்கை காக்கும் பயணத்தில் நமது கொள்கை என்றும் தோல்வியடையாது. வெற்றி - தோல்வி எதுவானாலும் சமமாகக் கருதி நமது லட்சியப் பயணத்தை தொடருவோம். மக்களுக்காக தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்.

மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் அர்ப்பணிப்பான உழைப்பைத் தந்த தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், ஆதரவளித்த  அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்! என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

muthuமே 5, 2026 - 07:53:30 PM | Posted IP 172.7*****

ஒரு பக்கம் விஜய் அலை வீசினாலும் தங்களின் தோல்விக்கு கழக கண்மணிகள்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. அது என்ன வென்று உங்களுக்கே புரியும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory