» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டம் மற்றும் தேசிய வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நூல் திறனாய்வு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
வாசகர் வட்டத்தின் தலைவர் முனைவர் சரவணகுமார் வரவேற்றார் மதிப்புறு முனைவர் தம்பான் தலைமை வகித்தார் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி முன்னிலை வகித்தார் நெல்லை மருத்துவக்கல்லூரி செவிலியர் மணிகண்டன் எழுதிய முதியோர் நலம் பற்றிய முதுமை ஒரு வரம் நூலை தமிழ் செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு திறனாய்வு செய்தார்
நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரிக்கு முழு உடல் தானம் செய்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகின்ற உலகநாதன் குருதி கொடை வழங்கிய சமுக ஆர்வலர் சுரேஷ் மற்றும் நோயுற்ற தந்தையை பராமரிக்கும் சகோதரர் கள் சுவாமிநாதன் சரவணன் ஆகியோருக்கு கேடயம் வழங்கி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
நூலாசிரியர் ஏற்ப்புரை வழங்கினார் கவிஞர் ஜெயபாலன் மேனாள் துணைஆட்சியர் தியாகராஜன் கவிஞர்கள் சுப்பையா ஜெயபாலன் பிரபு விரைமைதீன் வாழ்த்துரை வழங்கினார்கள் வாசகர் வட்டத்தின் மாணிக்கவாசகம் பிச்சுமணி பொன்னையா ஐசக்பாலசிங் சேதுராமன் மாணவர்கள் அஜய்பிரவின் முத்து கண்ணன் அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டனர் மரியபால்ராஜ் மணிகண்டன் ஆகியோர் நூலக புரவலராக சேர்ந்தனர் கிளை நூலகர் அகிலன் முத்துகுமார் நன்றி கூறினார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:49:27 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 12, ஆகஸ்ட் 2026 4:43:51 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:22:47 PM (IST)

நெல்லையில் பண மோசடி வழக்கு: 2 இளம்பெண்கள் அதிரடி கைது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:37:00 AM (IST)


