» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!

ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இருப்பினும், மீன்பிடி தடைக்காலம் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக மீன்களின் விலை குறையாமல் உயர்ந்தே காணப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்று வருகின்றனர். கடந்த சில வாரங்களாகக் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மீன்பாடு குறைவாக இருந்த நிலையில், நேற்று கரை திரும்பிய மீனவர்களின் வலைகளில் பெரிய அளவிலான மீன்கள் அதிகளவில் கிடைத்தன.

மீன்கள் வரத்து அதிகமாக இருந்தபோதிலும், சந்தையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாகக் கடந்த வாரத்தைப் போன்றே விலையில் மாற்றம் இன்றி உயர்ந்து காணப்பட்டது சீலா மீன் ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரை. விளை மீன், ஊழி, பாறை ரூ. 500 முதல் ரூ. 700 வரை. கேரை மீன் (70-80 கிலோ எடை கொண்டவை) ரூ. 270 முதல் ரூ. 300 வரை. நண்டு ரூ. 700 வரை. சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரை விற்பனையானது.

கோடை விடுமுறை என்பதால் மீன்களை வாங்குவதற்காகத் திரேஸ்புரம் துறைமுகத்தில் அதிகாலையிலேயே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் திரண்டனர். வரத்து அதிகமாக இருந்தும், போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மீன்களை வாங்கிச் சென்றதால் மீனவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல மீன்பாடும், அதே வேளையில் கூடுதல் லாபமும் கிடைத்துள்ளதால் தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory