» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் டீக்கடை முன்பு தேங்கும் கழிவுநீர்: நோய் தொற்று பரவும் அபாயம் - சிபிஎம் புகார்!
சனி 16, மே 2026 11:47:58 AM (IST)

தூத்துக்குடி அண்ணா சிலை பின்புறம் டீக்கடை முன்பாகக் கழிவுநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலையின் பின்புறம் தனியார் டீக்கடை இயங்கி வருகிறது. இந்தச் சாலை மற்றும் வணிக வளாகப் பகுதிக்குத் தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், இந்த டீக்கடையிலும் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த டீக்கடையின் முன்பாக மாநகராட்சியின் கழிவுநீர் கால்வாயிலிருந்து வெளியேறும் அசுத்த நீர், வடிய வழியில்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. தற்போது வெயில் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக, தேங்கியுள்ள இந்தக் கழிவுநீரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.
இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட அசுத்த நீரால் பரவும் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மாநகராட்சியின் மையப் பகுதியிலேயே சாக்கடை நிலத்தடி நீர் மற்றும் கழிவுநீர் வெளியேற முடியாமல் டீக்கடை முன்பு தேங்கியிருப்பது பெரும் கவலையளிக்கிறது. உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சுகாதாரத்தைப் பேண வேண்டியது மாநகராட்சியின் கடமையாகும்.
எனவே, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, கால்வாயைச் சீரமைக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் நோய் பரவாமல் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகரச் செயலாளர் எம்.எஸ்.முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)



Indianமே 16, 2026 - 04:40:05 PM | Posted IP 162.1*****