» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-இன் வாக்குப்பதிவிற்குப் பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரங்களில் உள்ள தெர்மல் பேப்பர் ரோல்கள் மற்றும் முகவரி அட்டைகளைத் தேர்தல் ஆணைய விதிகளின்படி அகற்றும் பணிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பலத்த பாதுகாப்புடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் (EVM Warehouse) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் கடிதத்தின்படி, வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த 10 நாட்களுக்குப் பின்னர், வாக்குப்பதிவின் போது விவிபேட் இயந்திரங்களில் பயன்படுத்தப்பட்ட தெர்மல் பேப்பர் ரோல்கள் (Thermal Paper Rolls) மற்றும் அதன் முகவரி அட்டைகளை (Address Tags) பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த நேரடி உத்தரவின்படி, நெல்லை கிட்டங்கியில் பாதுகாக்கப்பட்ட விவிபேட் இயந்திரங்களில் உள்ள தெர்மல் பேப்பர் ரோல்கள் மற்றும் முகவரி அட்டைகளை அகற்றும் பணிகள் இன்று (மே 19, செவ்வாய்க்கிழமை) காலை முறைப்படி தொடங்கின.
இப்பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியிலும் விதிகளின்படி துல்லியமாக நடைபெறுகின்றனவா என்பதை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, உள்கட்டமைப்புப் பாதுகாப்பு நிலவரங்களை விரிவாக ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன், தேர்தல் வட்டாட்சியர் முருகன் மற்றும் வருவாய்த்துறை, தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)

உலக புகைப்பட தினம்: நெல்லை புகைப்படக் கலை சங்கத்தினர் ரத்ததானம்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:41:48 PM (IST)

ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:28:19 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:42:51 AM (IST)


