» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையம் : ஆட்சியர் இரா.சுகுமார் திறந்து வைத்தார்
வியாழன் 21, மே 2026 4:38:35 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம், கொக்கிரகுளம் ரோஸ்மஹால் அருகில் UIDAI புதிய ஆதார் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று திறந்து வைத்தார்.
இந்த ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவு, மக்கள் தொகை விவரங்கள் மற்றும் உயிர்வள தகவல் புதுப்பித்தல், பிழைதிருத்தம், குறைதீர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதார் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. ஆதார் சேவை மையங்கள் நேரடியாக UIDAI மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் சக்கர நாற்காலி அணுகுமுறை, கழிப்பறை வசதிகள் மற்றும் தனிப்பட்ட குறைதீர் அமைப்பு போன்ற வசதிகளுடன் இம்மையம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையம் அனைத்து நாட்களிலும் செயல்படும். சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் அடுத்ததாக ஆறாவது ஆதார் சேவை மையம் தற்போது திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் ஒரு மேலாளர் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் குறைகளைபெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பி, விரைவான தீர்வை உறுதி செய்கிறார். ஆதார் சேவை மையங்கள் ஆதார் சேவைகளைப் பெறுவதற்கு, பொதுமக்கள் UIDAI –இன் "ஆதார் முன்பதிவு இணையதளம் (Aadhaar Appointment Portal) வாயிலாக இணையவழியிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம் : https://bookappointment.uidai.gov.in/
இம்மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து, அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். மேலும், ஆன்லைன் முன்பதிவு முறை மற்றும் ஆதார் சேவைகள் வழங்கப்படும் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில், UIDAI மண்டல அலுவலக துணை இயக்குநர் (பெங்களூர்) பிரியா ஸ்ரீகுமார், துணை மேலாளர் சைதன்யா மோபுரு, மேலாளர்கள் எம்.எஸ். குணசேகரன், ம.கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)

உலக புகைப்பட தினம்: நெல்லை புகைப்படக் கலை சங்கத்தினர் ரத்ததானம்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:41:48 PM (IST)

ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:28:19 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:42:51 AM (IST)


