» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:51:11 AM (IST)
நெல்லை அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது கூலி தொழிலாளியைப் போக்சோ சட்டத்தின் கீழ் டவுன் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
நெல்லை பேட்டை காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (50). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நெல்லை பகுதியைச் சேர்ந்த 5 வயதான, யு.கே.ஜி. படித்து வரும் சிறுமி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த மாணிக்கம், அந்தச் சிறுமியை நயவஞ்சகமாகத் தனியாக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியும் பாதிப்பும் அடைந்த அந்தச் சிறுமி, அழுதுகொண்டே தனது வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விபரமாகத் தெரிவித்துள்ளாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து நெல்லை குழந்தைகள் நல்வாழ்வு அமைப்பினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் குழந்தைகள் நல்வாழ்வு குழுவின் வழக்கு பணியாளர் இசக்கியம்மாள், நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.
குழந்தைகள் நல்வாழ்வு குழுவினர் அளித்த புகாரின் பேரில், நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 5 வயது சிறுமிக்கு கூலி தொழிலாளி மாணிக்கம் பாலியல் தொல்லை கொடுத்தது முற்றிலும் உறுதியானது.
இதையடுத்த சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ பிரிவின் கீழ் மாணிக்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
சனி 6, ஜூன் 2026 10:30:58 AM (IST)

தாமிரபரணி நதியைக் காக்கத் தீவிர நடவடிக்கை: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் உறுதி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:34:53 PM (IST)

பெண் குழந்தையை சாக்குப்பையில் போட்டுத் துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர் கைது!
வெள்ளி 5, ஜூன் 2026 12:45:29 PM (IST)

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக திருநாவுக்கரசு நியமனம்
வெள்ளி 5, ஜூன் 2026 8:45:07 AM (IST)

அரசு பேருந்து - பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: மாணவர்கள் உட்பட 10பேர் படுகாயம்!
வியாழன் 4, ஜூன் 2026 5:56:09 PM (IST)

நெல்லையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 12:26:10 PM (IST)


