» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!

செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)



தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலரைப் பாராட்டி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட தெற்கு காவல் நிலைய குற்ற எண் 677/2026, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 130(1)-ன் கீழான வழக்கில் தொடர்புடைய எதிரிகளைக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்காற்றிய போலீசாருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் காவலர் மாடசாமி ஆகியோரின் காவல் பணியினைப் பாராட்டும் பொருட்டு, இன்று அவர்களைத் திருநெல்வேலி சரக அலுவலகத்திற்கு வரவழைத்து, காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.


மக்கள் கருத்து

Antony samyJun 25, 2026 - 01:19:30 PM | Posted IP 162.1*****

அதென்ன பாரதீய நியாய சன்ஹிதா... தமிழ் நாட்டில் இருக்கும் அலுவலக சொல் தமிழில் இல்லையா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory