» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வைகோவின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஆட்சியரிடம் மக்கள் கூட்டமைப்பு மனு!
திங்கள் 29, ஜூன் 2026 3:33:53 PM (IST)

தூத்துக்குடியில் ஜூலை 2 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள வைகோ பொதுக்கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மதிமுக சார்பில் ஜூலை 2 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துப்பறியும் மக்கள் கூட்டமைப்பு' மற்றும் 'தமிழர் விடியல் கட்சி' சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துப்பறியும் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், தமிழர் விடியல் கட்சியின் நிறுவனருமான சே.மா.சந்தணராஜ் மற்றும் முகமது அசன் ஆகியோர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மனு அளித்தனர்.
அந்த மனுவில், கடந்த ஐந்து ஆண்டுகாலத் திமுக ஆட்சியில் மதிமுக தொடர்ந்து கூட்டணியில் பங்கு வகித்து வருகிறது. ஆனால், இந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தொடர்பாக எவ்விதப் போராட்டங்களையும் முன்னெடுக்காமல் மதிமுக மௌனம் காத்து வந்தது.
தற்போது திடீரெனத் தூத்துக்குடியில் வைகோ தலைமையில் பொதுக்கூட்டத்தை அறிவித்திருப்பது, தேர்தல் நெருங்கும் சூழலில் தூத்துக்குடி மக்களைத் திசை திருப்பும் நோக்கில் திட்டமிடப்பட்ட செயலாகும். எனவே, சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த மதிமுக பொதுக்கூட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் : ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!
புதன் 1, ஜூலை 2026 5:56:42 PM (IST)

நெல்லையில் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் நிறைவு: முனைய ரயில் நிலையமாக தரம் உயர்வு
புதன் 1, ஜூலை 2026 4:37:30 PM (IST)

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:41:43 AM (IST)

வகுப்பறையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியருக்குச் சாகும்வரை சிறை தண்டனை விதிப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:17:38 AM (IST)

பாட்டி-பேரன் இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 7:56:10 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 29, ஜூன் 2026 4:06:11 PM (IST)



ஆமாம்Jul 1, 2026 - 10:36:58 AM | Posted IP 162.1*****