» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முதல்வர் விஜய் குறித்த அவதூறு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்ஜாமீன் மனு தாக்கல்!

புதன் 1, ஜூலை 2026 12:34:03 PM (IST)



தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறான வகையிலும் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில், அரசியல் உள்நோக்கத்தோடு தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இம்மானு மீதான விசாரணை விரைவில் நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.


மக்கள் கருத்து

சந்திரன்Jul 1, 2026 - 01:57:57 PM | Posted IP 172.7*****

பேச்சில் நாகரிகம் இல்லை சபாநாயகரை கவர்னர் என்று ஊளருகிரார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory