» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டிராக்டர் மோதி விபத்து: வாலிபர் பரிதாப மரணம்!

வியாழன் 2, ஜூலை 2026 4:28:06 PM (IST)

பழையகாயலில் டிராக்டர் மோதி படுகாயம் அடைந்த வாலிபர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன் சுதர்சன் (18). இவர் கடந்த ஜூன் 29-ஆம் தேதி காலை பழைய காயல் பகுதியிலிருந்து தனது சொந்த ஊரான கணேஷ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக சுதர்சன் மீது பலமாக மோதியது. 

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுதர்சனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் மற்றும் அதன் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

கிப்சன்Jul 2, 2026 - 09:51:08 PM | Posted IP 162.1*****

உடல் உறுப்பு தானம் செய்து கொண்டார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory