» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாயின் உடல்நிலையால் கவலை: மகன் தற்கொலை!

வியாழன் 2, ஜூலை 2026 4:32:34 PM (IST)

தூத்துக்குடியில் தாய்க்கு புற்றுநோய் பாதிப்பால் மனமுடைந்த மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

தூத்துக்குடி அண்ணா நகர் 9-ஆவது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் குருசாமி (39). திருமணமாகாத இவர், சாலையில் குப்பைகளைச் சுத்தம் செய்யும் வாகனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது தாய் ராமலட்சுமிக்கு (52) புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், வரும் ஜூலை 12-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. இதனால் வெங்கடேசன் குருசாமி கடந்த சில நாட்களாகக் கடுமையான சோகத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று வழக்கம் போல் வேலைக்குச் செல்லாமல் வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவரது அண்ணன் கோபாலகிருஷ்ணன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வெங்கடேசன் குருசாமி வீட்டின் மரக்கட்டையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த தென்பாகம் போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

நீJul 5, 2026 - 01:49:31 PM | Posted IP 104.2*****

தான் கூட இருந்து பாத்துக்கணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory