» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாயின் உடல்நிலையால் கவலை: மகன் தற்கொலை!
வியாழன் 2, ஜூலை 2026 4:32:34 PM (IST)
தூத்துக்குடியில் தாய்க்கு புற்றுநோய் பாதிப்பால் மனமுடைந்த மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி அண்ணா நகர் 9-ஆவது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் குருசாமி (39). திருமணமாகாத இவர், சாலையில் குப்பைகளைச் சுத்தம் செய்யும் வாகனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது தாய் ராமலட்சுமிக்கு (52) புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், வரும் ஜூலை 12-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. இதனால் வெங்கடேசன் குருசாமி கடந்த சில நாட்களாகக் கடுமையான சோகத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் வேலைக்குச் செல்லாமல் வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவரது அண்ணன் கோபாலகிருஷ்ணன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வெங்கடேசன் குருசாமி வீட்டின் மரக்கட்டையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த தென்பாகம் போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

9 உயிர்களைப் பலிவாங்கிய தண்ணீர்ப் பிரச்சினை: நெல்லை கொடூரக் கொலைகளின் பின்னணி!
சனி 4, ஜூலை 2026 9:10:52 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது : சிங்கப்பெண் அதிரடிப்படையால் சிக்கியனார்!
வெள்ளி 3, ஜூலை 2026 8:39:43 AM (IST)

மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு!
வெள்ளி 3, ஜூலை 2026 8:35:22 AM (IST)

தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை; மற்றொரு மகன் படுகாயம்: நெல்லையில் பயங்கரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 7:48:33 AM (IST)

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் மோசடி - நெல்லையில் வைகோ பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 10:42:13 AM (IST)



நீJul 5, 2026 - 01:49:31 PM | Posted IP 104.2*****