» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது!
வெள்ளி 3, ஜூலை 2026 8:28:46 AM (IST)
கழுகுமலை அருகே இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படம் அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம், ஜம்புலிங்கபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் சக்திவேல் (29). விவசாயியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் கைப்பேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செயலி வழியாக ஆபாசமான படங்களை அனுப்பியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைமறைவாக இருந்த சக்திவேலை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

9 உயிர்களைப் பலிவாங்கிய தண்ணீர்ப் பிரச்சினை: நெல்லை கொடூரக் கொலைகளின் பின்னணி!
சனி 4, ஜூலை 2026 9:10:52 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது : சிங்கப்பெண் அதிரடிப்படையால் சிக்கியனார்!
வெள்ளி 3, ஜூலை 2026 8:39:43 AM (IST)

மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு!
வெள்ளி 3, ஜூலை 2026 8:35:22 AM (IST)

தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை; மற்றொரு மகன் படுகாயம்: நெல்லையில் பயங்கரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 7:48:33 AM (IST)

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் மோசடி - நெல்லையில் வைகோ பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 10:42:13 AM (IST)



காஜிJul 5, 2026 - 01:49:59 PM | Posted IP 162.1*****