» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பணிமனையைச் சார்ந்த அரசுப் பேருந்து ஒன்று, குமரி - கேரள எல்லைப் பகுதி வழியாகப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எல்லைப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென அரசுப் பேருந்தை நோக்கிப் பெரிய கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாகப் பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் அனைவரும் பெரும் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கல் வீச்சுச் சம்பவம் குறித்துப் பேருந்து ஓட்டுநர் எல்லைப் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்திவிட்டுத் தலைமறைவான மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். எல்லைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

9 உயிர்களைப் பலிவாங்கிய தண்ணீர்ப் பிரச்சினை: நெல்லை கொடூரக் கொலைகளின் பின்னணி!
சனி 4, ஜூலை 2026 9:10:52 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது : சிங்கப்பெண் அதிரடிப்படையால் சிக்கியனார்!
வெள்ளி 3, ஜூலை 2026 8:39:43 AM (IST)

மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு!
வெள்ளி 3, ஜூலை 2026 8:35:22 AM (IST)

தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை; மற்றொரு மகன் படுகாயம்: நெல்லையில் பயங்கரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 7:48:33 AM (IST)

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் மோசடி - நெல்லையில் வைகோ பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 10:42:13 AM (IST)


