» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் : உயர் நீதிமன்றம் உத்தரவு

புதன் 5, ஆகஸ்ட் 2026 9:55:27 AM (IST)

பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் அனுப்பியது தொடர்பாக சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் ஓட்டப்பிடாரத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டது சொல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலராக பெனிஷ்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வரும் ராமேஸ்வரன் என்பவரிடம் சாதி ரீதியாக நடத்தியதாகவும், மேலும் பெண் ஆசிரியர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஒழுங்கற்ற மெசேஜ் அனுப்பி, மதிய உணவு வேளையில் அவருக்கு தொந்தரவு செய்ததாக கூறி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கரை, ஓட்டப்பிடாரம் வட்டார கல்வி அலுவலராக பணி மாற்றம் செய்தனர். 

இந்த பணி மாற்றம் தன்னை பழிவாங்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக கூறி வட்டார கல்வி அலுவலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையிட்டார். அதன்பேரில் மதுரை உயர்நீதிமன்றம் கிளை, வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர் இடமாறுதல் உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் இடைக்கால உத்தரவை எதிர்த்து வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர், பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் ஒழுங்கற்ற மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்ததாக புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெனிஷ்கர், அதே வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தால் இந்த விசாரணை பாதிக்கப்படும் நிலை ஏற்படும், அவர் பழிவாங்கல் காரணமாக இடம் மாறுதல் செய்யப்படவில்லை.

நிர்வாக காரணமாகவே பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மீண்டும் முறையிடப்பட்டது. அதன்படி மீண்டும் விசாரணை செய்த நீதிமன்றம், இடம் மாறுதல் தொடர்பாக அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கிய இடமாற்ற உத்தரவு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலராக மாணிக்கராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து

BeniskarAug 5, 2026 - 01:52:37 PM | Posted IP 162.1*****

அருள்ராஜ் எனும் முட்டாளை நம்பியதால் இந்த கதி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory