» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வேன் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி, 3 பேர் படுகாயம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 11:57:42 AM (IST)
ஆறுமுகநேரி அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி இளங்காத்தா அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் லட்சுமணன் (40), ரங்கன் மகன் சுதாகர் (48) மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வினோத் (41) ஆகிய 3 பேரும் காரில் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். காரை லட்சுமணன் ஓட்டியுள்ளார்.
ஆறுமுகநேரி சோதனைச் சாவடி அருகே கார் சென்றபோது, குரும்பூரில் இருந்து காயல்பட்டினம் நோக்கி எதிரே வந்த வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வினோத் (41) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காரில் இருந்த லட்சுமணன், சுதாகர் மற்றும் வேன் ஓட்டுநரான குரும்பூர் தண்ணீர் பந்தலைச் சேர்ந்த முருகன் மகன் மகேஷ் (35) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். நல்வாய்ப்பாக வேனில் இருந்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த 3 பேரையும் மீட்டுச் சிகிச்சைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த வினோத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநர் மகேஷ் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை: பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:44:23 AM (IST)

விபத்தில் லோடுமேன் உயிரிழந்த வழக்கு: ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:29:46 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)



ஶ்ரீAug 8, 2026 - 01:54:15 PM | Posted IP 104.2*****