» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண்ணை ஆபாசமாகச் சித்திரித்து வாட்ஸ்-அப்பில் பகிர்வு : இளைஞர் கைது!

சனி 15, ஆகஸ்ட் 2026 8:21:55 AM (IST)

இளம்பெண்ணை ஆபாசமாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, அதைத் தட்டிக்கேட்ட அப்பெண்ணையும் அவரது தந்தையையும் மிரட்டிய இளைஞரை ஆறுமுகனேரி போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த சிந்தா மதார் சாகிப் மகன் முகமது ரிச்வி (25). இவர் 25 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்து 'வாட்ஸ்-அப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இச்செயலைப் பற்றி அறிந்த அந்தப் பெண்ணும் அவரது தந்தை சுலைமானும் முகமது ரிச்வியின் வீட்டிற்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் இருவரையும் முகமது ரிச்வி அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆறுமுகனேரி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது ரிச்வியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory