» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநங்கையைக் கத்தியால் குத்தி செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 8:48:55 AM (IST)
தூத்துக்குடி புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே திருநங்கையைக் கத்தியால் குத்தி, அவரிடமிருந்த செல்போனைப் பறித்துச் சென்ற 2 சிறுவர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்டவர்: தூத்துக்குடி சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சித்ரா (47). இவர் புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று சித்ரா உணவகம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 சிறுவர்கள் அவரிடம் இருந்த செல்போனைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதற்கு அவர் செல்போனைத் தர மறுத்துள்ளார்.செல்போனைத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அச்சிறுவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவின் வயிறு மற்றும் இடது முழங்கை ஆகிய இடங்களில் சரமாரியாகக் குத்தினர். பின்னர் அவரிடமிருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த சித்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட சித்ராவின் செல்போன் டவர் சிக்னலை ஆய்வு செய்தபோது, அந்தச் சிறுவர்கள் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்குச் சென்ற புதியம்புத்தூர் போலீசார், தப்பியோடிய 2 சிறுவர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கைதான 2 சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:49:27 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 12, ஆகஸ்ட் 2026 4:43:51 PM (IST)


