» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மின் கட்டண உயர்வால் மக்கள் அவதி!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 10:53:10 AM (IST)

தூத்துக்குடியில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புதிய அரசின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தவெக தலைமையில் புதிய அரசு அமைந்ததில் இருந்து பல்வேறு வகையான விலைவாசிகள் தாறுமாறாக அதிகரித்துள்ளதாக இணையதளத்தில் தமிழக மக்கள் அதிர்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புதிய அரசின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சிவராம் கூறுகையில், பல லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக தவெக ஆட்சியில்தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு காரணம் தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் இந்த சலுகை 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தும் என அறிவித்திருந்தது.
அதேசமயம் 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லாமல் பழைய மாதிரி 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் மாத அடிப்படையில் மின் கட்டண கணக்கீடு மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிக்கு மாறாக, 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே 200 யூனிட் இலவசம் என முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து தவெகவின் தேர்தல் வாக்குறுதி மீறப்பட்டதாக அல்லது மாற்றப்பட்டதாக அப்போதே பெரும் விமர்சனத்திற்குள்ளானது. மேலும் பழையபடி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்வதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மக்கள் கருத்து
அதுAug 28, 2026 - 03:10:53 PM | Posted IP 172.7*****
ஆட்சி மாற்றத்தின் போது திராவிட பயலுகளின் திருட்டு வேலையாக இருக்கும்
BalaAug 28, 2026 - 12:58:53 PM | Posted IP 104.2*****
Tharkuri aatchi.... Maatram Yematram... Fradu payaluga....
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சியில் நபிகள் நாயகம் பிறந்த நாள், மதரஸா ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:11:24 AM (IST)

சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி பலி: தந்தை கைது!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:16:28 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:39:29 PM (IST)

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 11:57:39 AM (IST)

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)

மிலாடி நபி: மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)



Naan thaanAug 28, 2026 - 07:08:29 PM | Posted IP 162.1*****