» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் சுவாமி சண்முகர் 368-வது ஆண்டு விழா சிறப்பு வழிபாடு!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 3:39:53 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 368- வது ஆண்டு விழா நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 368- வது ஆண்டு விழா நடைபெற்றது, இதைெயாட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபா ராதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடை பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுவாமி அலைவாயு உகந்த பெரு மான் சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வருபம், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.
மதியம் உச்சிகால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி அலைவாயு உகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம் , அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம்: விஜய்
ஞாயிறு 18, மே 2025 8:55:51 PM (IST)

சுற்றுலா வேன் மீது ஆம்னி பஸ் மோதல்: தந்தை-மகன் உள்பட 5 பேர் பலி; 27 பேர் படுகாயம்
ஞாயிறு 18, மே 2025 9:36:09 AM (IST)

கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து: 2 பெண்கள், குழந்தை உட்பட 5பேர் பரிதாப சாவு!
சனி 17, மே 2025 9:13:18 PM (IST)

டாஸ்மாக் ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்
சனி 17, மே 2025 5:12:23 PM (IST)

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 17, மே 2025 4:20:36 PM (IST)

குமரி மாவட்டத்தில் மே 24ல் மெகா வேலைவாய்ப்பு முகாம் : இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு!
சனி 17, மே 2025 4:06:54 PM (IST)
