» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கத்திமுனையில் பைக் பறிப்பு: 4பேர் கும்பல் கைவரிசை - தூத்துக்குடியில் துணிகரம்!!
புதன் 14, பிப்ரவரி 2024 10:38:55 AM (IST)
தூத்துக்குடியில் வாலிபரை கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் பைக்கை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மாரிமுத்து (21). இவர் நேற்று மதியம் புதிய துறைமுகம் பகுதியில் இருந்து பைக்கில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூர் ரவுண்டான அருகே 4பேர் அவரை லிப்ட் கேட்டு பைக்கை நிறுத்தியுள்ளனர்.
அவர் பைக்கை நிறுத்தியதும் அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி மாரிமுத்துவிடம் இருந்த ரூ.2ஆயிரம் பணம் மற்றும் அவரது மோட்டார் பைக்கை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் : விரைவில் திறப்பு விழா!
சனி 5, ஜூலை 2025 8:58:51 AM (IST)
