» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் மேள கலைஞர் வெட்டிக் கொலை : முன்விரோதத்தில் பயங்கரம்!

ஞாயிறு 3, மார்ச் 2024 7:43:03 PM (IST)

தூத்துக்குடியில் முன் விரோதத்தில் மேள கலைஞரை வீடுபுகுந்து வெட்டிக் கொலை செய்த 7பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.  

தூத்துக்குடி அமுதா நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் தங்கமுத்து கருப்பசாமி (25). மேள கலைஞர். எஸ்.என்.ஆர்., நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் ராஜா என்ற எலி (23), 3 சென்ட் அந்தோனியார் புரத்தை சேர்ந்த ஜெயசீலன் மகன் ஆரோன் என்ற தயாளன் (20). இவர்கள் 3 பேரும்  நண்பர்கள். இவர்களுக்குள் கடந்த 2022 ஆம் ஆண்டு தேதி தகராறு ஏற்பட்டது. 

இந்த தகராறில் ராஜா என்ற எலியும் ஆரோன் என்ற தயாளன் ஆகிய இருவரும் சேர்ந்து கருப்பசாமியை அரிவாளால் வெட்டினார்களாம். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது சம்பந்தமாக  தென்பாகம்  காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். 

இந்நிலையில் இவர்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா என்ற எலி, அருண் என்ற தயாளன் மற்றும் 5பேர் சேர்ந்து இன்று மாலை அமுதா நகரில் வீட்டில் இருந்த கருப்பசாமியை வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து, கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory