» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யானைப் பசிக்கு சோளப்பொறி: மத்திய அரசு நிவாரண நிதி குறித்து ஜெயக்குமார் கருத்து!

சனி 27, ஏப்ரல் 2024 11:53:41 AM (IST)

யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியும், வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.397 கோடியும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ.115.45 கோடியும், ரூ.397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து ரூ.160.61 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர் கூறும்போது, "தேசியக் கட்சிகளால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. என யார் ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்திற்கு நிதி தருவதில்லை. வடக்கிற்கு ஒரு நீதி; தெற்கிற்கு ஒரு நீதி என்பதை ஏற்க முடியாது. மத்திய அரசு குறைவாக நிதி அளித்துள்ளது.

யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது. நிதி பகிர்வு சீராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory