» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூரில் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்குத் தடை!

வியாழன் 7, மார்ச் 2024 8:06:33 AM (IST)

திருச்செந்தூரில் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த, மற்றும் விற்பனை செய்ய நகராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் நகராட்சிப் பகுதியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ அல்லது சேமித்து வைத்துக் கொள்ளவோ பொதுமக்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கை ஒழித்து மாற்றுப் பொருள்களை பயன்படுத்தி *பிளாஸ்டிக் இல்லா நகரமாக* மாற்றுவதற்கு போதிய ஒத்துழைப்பு வழங்கிடுமாறு நகராட்சித் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், ஆணையா் கண்மணி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனா்.


மக்கள் கருத்து

A.subramanianMar 7, 2024 - 11:05:22 PM | Posted IP 172.7*****

திருச்செந்தூர் முருகன் கோயில் ஒரு புனித மான ஆலயத்தில் ஒன்று ஆகையால் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது நன்று.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory