» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில் மோதி கல்லூரி மாணவி பலி! கோவில்பட்டியில் சோகம்!!

திங்கள் 25, மார்ச் 2024 12:40:40 PM (IST)

கோவில்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம, கயத்தார் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகள் கவிதா (20). இவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை, கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ரெயில்வே சுரங்க பாலம் அருகே ரெயில்வே தண்டவாளத்தினை கடக்க முயன்றபோது, அவர் ரயில் மோதி உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து ரயில்வே போலீசார் மாணவியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory