» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனிமொழி விரைவில் சிறைக்கு செல்லும் நிலை உருவாகும் : அதிமுக வேட்பாளர் பேட்டி
திங்கள் 25, மார்ச் 2024 3:04:27 PM (IST)
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி விரைவில் சிறைக்கு செல்லும் நிலை உருவாகும் என்பதால் பொதுமக்கள் வாக்குகளை வீணாக்காமல் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள் என அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி கூறினார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது "எடப்பாடி நான்கு ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிப்பேன். திமுக ஊழல் செய்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அமைச்சர்களாக சிறை சென்று வருகிறார்கள்.
2 ஜி வழக்கு உச்ச நீதிமன்றம் இப்போது விசாரணைக்கு எடுத்துள்ளது. இதனால் திமுக வேட்பாளர் கனிமொழி விரைவில் சிறைக்கு செல்லும் நிலைமை ஏற்படும். எனவே தூத்துக்குடி பொதுமக்கள் படித்தவர்கள் சிந்தித்து வாக்களிப்பவர்கள் எனவே வாக்குகளை வீணாக்காமல் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன் என அவர் கூறினார். மேலும் என்னை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.